இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
அறிமுகம்
- அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV, விதி 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது.
- இந்த கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகச் செயற்படுத்த முடியாது.
- ஆனால் இவை ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமானவை.
- சட்டங்களை உருவாக்கும் போது இந்தக் கோட்பாடுகளைப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
- சமுதாய நலனை மக்களுக்குத் தருவதே இதன் நோக்கமாகும்.
- இந்திய அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்’ என டாக்டர். B.R. அம்பேத்கர் இதனை விவரிக்கிறார்.
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் அனைத்து குடிமக்களுக்கும் போதுமான சமூக பொருளாதார குறிக்கோள் மூலம் சமூக நலனை உருவாக்குகிறது.
- பெரும்பான்மையான நெறிமுறை கோட்பாடுகள் இந்திய அரசியல் அமைப்பு முறையில் குறிப்பிட்டுள்ள சமூக பொருளாதார நெறிகளை நிலைநாட்டுவதற்கு வழிகாட்டவல்ல கொள்கையாக திகழ்கிறது
- மேலும் இக்கோட்பாடுகள் சமூக பொருளாதார, அரசியல் நீதி, கல்வி, நிர்வாகம், பண்பாடு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
DPSP இன் வகைப்பாடு:
- சமத்துவ கொள்கை – இக்கொள்கை சமத்துவம் என்ற கருத்தாக்கத்தை உடையது. மாநிலத்தில் சமூக மற்றும் பொருளாதார நீதியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
- விதி 38, விதி 39, விதி 39A, விதி 41, விதி 42, விதி 43A, விதி 46.
- காந்திய கொள்கை – இக்கொள்கை காந்திய சித்தாந்தத்தின் கருத்தாக்கத்தை உடையது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிராம பஞ்சாயத்து மேம்பாடு அதன் வளர்ச்சி, போதை பானங்களுக்கு தடை, இன்னபிறவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- விதி 40, விதி 43, விதி 46, விதி 47, விதி 48.
- தாராளவாத–அறிவுசார்ந்த கொள்கை – இந்த கொள்கைகள் தாராளவாத கருத்து நோக்கம் உடையது, அது குடிமக்களின் அறிவை சார்ந்துள்ளது.
- விதி 44, விதி 45, விதி 48A.
விதி 36
இந்த பகுதியில், சூழல் வேறுவிதமாகத் தேவைப்படாவிட்டால், “அரசு” என்பது மூன்றாம் பாகத்தில் உள்ள அதே பொருளைக் கொண்டுள்ளது
விதி 37
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது.
- ஆனால் அரசாங்கம் சட்டம் இயற்றும் போது இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- அரசு நெறிமுறைக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்த எந்தவொரு நீதிமன்றமும் கேள்வி எழுப்ப முடியாது.
விதி 38
- மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அரசாங்கம் முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் சமூக ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்.
- மாநில அரசு வருமானம் வசதிகள் திறமைகள் மற்றும் மக்கள் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்க முயல வேண்டும்.
விதி 39
- சமூகத்தில் இருக்கும் மூலவளங்களை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும்.
- சமூகத்தின் வளங்களும் அதிகாரங்களும் ஒருவரிடம் குவிவதை தடுக்க வேண்டும்.
- சம வேலைக்கு சம ஊதியம்.
- குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
விதி 39 A
சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும்
விதி 40
- அரசாங்கம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
- 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1993 மூலம் பஞ்சாயத்து ராஜ் நடைமுறைப்படுத்தப்பட்டது.
விதி 41
- கல்வியின்மை வேலையின்மை முதுமை நோய் போன்ற காரணங்களால் வருவாய் ஈட்ட முடியாதவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்க வேண்டும்.
- எடுத்துக்காட்டு தேசிய சமூக உதவித் திட்டம் 1995.
விதி 42
- வேலையாட்களுக்கு நியமனம் மற்றும் மனிதாபிமானம் உள்ள நிபந்தனை வழங்க வேண்டும்.
- மகப்பேறு உதவி வழங்க வேண்டும்.
- பேறுகால உதவிச் சட்டம்-1961 (6 மாதங்கள் (168 நாட்கள்)).
விதி 43
தனியார் பங்களிப்புடன் குடிசைத் தொழிலை மேம்படுத்த அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்
விதி 43A
தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பங்கு கொள்ள அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்
விதி 43B
கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல்
விதி 44
குடிமக்களுக்கான பொதுவான சிவில் சட்டம்
விதி 45
- 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்.
- 1 முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளை பேணி பாதுகாக்க வேண்டும்.
விதி 46
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் இன் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும்
விதி 47
- உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய மது மற்றும் போதைப் பொருட்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் போன்றவற்றை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.
- தேசிய போதைப் பொருள் ஆராய்ச்சி மையம் – லக்னோ.
- மக்களின் உடல் நலத்தை மேம்படுத்தி ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்.
விதி 48
- பசு பால் கொடுக்கும் உயிரினம் பாரம் சுமக்கும் உயிரினம் கன்றுகுட்டி போன்றவற்றை கொள்வதில் இருந்து பாதுகாக்க வேண்டும் மிருகவதை தடுப்பு சட்டம்-1960.
- வேளாண் துறையில் புதிய நவீன முறைகளை புகுத்த வேண்டும்.
விதி 48A
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்த அரசு வழிவகை செய்யவேண்டும்.
- வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க வழி வகை செய்ய வேண்டும்.
- 42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்1976 இப்படி சேர்க்கப்பட்டது.
எடுத்துக்காட்டு
- 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் குஜராத் கிர் தேசிய பூங்கா.
- 1973-புலி பாதுகாப்பு திட்டம்.
- 1974 நீர் பாதுகாப்பு திட்டம்.
- 1976-சமூக காடுகள் பாதுகாப்பு திட்டம்.
- 1980-வன பாதுகாப்பு சட்டம் (1988 திருத்தப்பட்டது).
- 1981-காற்று பாதுகாப்பு சட்டம்.
- 1986-சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்.
- 1992-யானைகள் பாதுகாப்பு திட்டம்.
- 2006-வன உரிமைச் சட்டம்.
விதி 49
பாரம்பரிய சின்னங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை அரசாங்க பாதுகாக்க வேண்டும்
விதி 50
நிர்வாகத் துறையும் நீதித்துறையும் பிரிக்கவேண்டும்
விதி 51
அரசாங்கம் உலக அமைதி மற்றும் பண்பாட்டு உறவை பாதுகாக்க வேண்டும் மேலும் எல்லை பிரச்சனைகளை அமைதியாக பேசி தீர்க்க வேண்டும்
பகுதி IV க்கு வெளியே உள்ள கட்டளைகள்:
பகுதி IVஇல் அடங்கியுள்ள கட்டளைகளைத் தவிர, வேறு சில கட்டளைகளும் அரசியலமைப்பின் பிற பகுதிகளில் உள்ளன
அவை:
- பகுதி XVI இல் விதி 335- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சேவைகளுக்கான கோரிக்கைகள்: ஒன்றியம் அல்லது ஒரு மாநிலத்தின் அலுவல்கள் தொடர்பான சேவைகள் மற்றும் பதவிகளுக்கான நியமனங்களை உருவாக்குவதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் கோரிக்கைகள், நிர்வாகத்தின் செயல்திறனைப் பராமரிப்பதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- பகுதி XVII-ல் விதி 350-A – தாய்மொழியில் அறிவுறுத்தல்: மொழியியல் சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியின் முதன்மை கட்டத்தில் தாய்மொழியில் கற்பிப்பதற்கான போதுமான வசதிகளை வழங்குவது ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் மாநிலத்திற்குள் உள்ள ஒவ்வொரு உள்ளூர் அதிகாரத்தின் கடமையாகும்.
- பகுதி XVII-ல் விதி 351- இந்தி மொழியின் வளர்ச்சி: இந்தி மொழியின் பரவலை ஊக்குவிப்பதும் அதை வளர்ப்பதும் யூனியனின் கடமையாக இருக்கும், இதனால் இது இந்தியாவின் கூட்டு கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளுக்கும் வெளிப்பாடு ஊடகமாக செயல்படும்.
1976 ஆம் ஆண்டின் 42 வது சட்டத்திருத்தம்:
- 1976 ஆம் ஆண்டின் 42 ஆவது சட்டத்திருத்தம் நான்கு புதிய வழிநடத்துதல் கோட்பாடுகளை அரசு பட்டியலில் சேர்த்தது.
- குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பாதுகாத்தல் (விதி 39).
- சம நீதியை ஊக்குவித்தல் மற்றும் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குதல் (விதி 39A).
- தொழில்களின் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் (விதி 43A).
- சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் (விதி 48A).
1978 ஆம் ஆண்டின் 44 வது சட்டத்திருத்தம்:
வருமானம், அந்தஸ்து, வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க மாநிலங்கள் முயற்சி செய்யும் (விதி 38)
2002 ஆம் ஆண்டின் 86 வது சட்டம் திருத்தம்
- 2002 ஆம் ஆண்டின் 86 வது சட்டத்திருத்தம் 45வது விதியில் உள்ளதை மாற்றி 21ஆம் விதியின் கீழ் தொடக்கக் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக மாற்றியது.
- திருத்தப்பட்ட உத்தரவு, அனைத்து குழந்தைகளுக்கும் ஆறு வயது பூர்த்திசெய்யும் வரை ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க வேண்டும்.
2011 ஆம் ஆண்டின் 97வது சட்டத்திருத்தம்
- 2011 ஆம் ஆண்டின் 97வது சட்டத்திருத்தம் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான புதிய வழிநடத்துதல் கோட்பாட்டைச் சேர்த்தது.
- தன்னார்வ உருவாக்கம், தன்னாட்சி செயல்பாடு, ஜனநாயக கட்டுப்பாடு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தொழில்முறை நிர்வாகத்தை ஊக்குவிக்க அரசுக்கு இது தேவைப்படுகிறது (விதி 43B).
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |