வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1,பகுதி – 2,பகுதி – 3 மற்றும் பகுதி – 4 ண்டை இங்கு படியுங்கள்.
ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்
|
மதம்
ரிக்வேதகால:
- ரிக்வேதகால ஆரியர்கள்பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுளர்களை வழிபட்டனர்.
- பிருத்வி (நிலம்), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன் (இடி) போன்றவற்றை வணங்கினர்.
- அதிதி (நித்தியக் கடவுள்), உஷா (விடியற்காலைத் தோற்றம்) ஆகிய குறைவான பெண் தெய்வங்களை வணங்கினர்.
- அவர்களின் மதம்சடங்குமுறைகளை மையமாகக் கொண்டது.
- வேத மந்திரங்களைப் பாராயணம் செய்வதே வழிபாட்டு முறையாக இருந்தது.
- குழந்தைகள் (பிரஜா), பசு (கால்நடைகள்), செல்வம் (தனா) ஆகியவற்றின் நலனுக்காக மக்கள் தெய்வங்களை வணங்கினர்.
- பசு புனிதமான விலங்காகக் கருதப்பட்டது.
- கோவில்கள் இல்லை மற்றும் சிலை வழிபாடும் வழக்கத்தில் இல்லை.
பின்வேதகாலம்:
- பின்னாளில் மதகுருவாக இருப்பது ஒரு தொழிலாகவும், அது பரம்பரைத் தொழிலாகவும் ஆனது.
- ஆரியர் அல்லாத கடவுள்களும் ஏற்கப்பட்டிருக்கலாம்.
- இந்திரனும், அக்னியும் முக்கியத்துவத்தை இழந்தனர்.
- பிரஜாபதி (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்), ருத்ரன் (அழிப்பவர்) ஆகிய கடவுளர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.
கல்வி:
குருகுலக்கல்வி முறை
- குருகுலக் கல்வி முறை என்பது பழங்கால கற்றல் முறை ஆகும்.
- குருகுலம் என்னும் சொல் குரு (ஆசிரியர்), குலம் (குடும்பம் அல்லது வீடு) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும்.
- இம்முறையில் மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்வதோடு கல்வியும் கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.
- வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர்.
- கற்றவை அனைத்தையும் மாணவர்கள் மனப்பாடம் செய்தனர்.
- நான்கு வேதங்கள், இதிகாசங்கள்,புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன.
- ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
- இரு பிறப்பாளர்கள் (Dvijas) மட்டுமே குருகுலத்தில் மாணவர்களாகச் சேர்க்கப்படுவர்.
- பெண்களுக்கு பொது கல்வி அளிக்கப்படவில்லை.
நான்கு ஆஸ்ரமங்கள்:(வயதின் அடிப்படையில்)
பின்வேதகால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகள் (நான்கு ஆஸ்ரமங்கள்) என்ற கோட்பாடு உருவாயின.
- பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்)
- கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை)
- வனப்பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்)
- சன்னியாசம் (வீடுபேறு அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்)
இது பகுதி 5 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.
***************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil